நாளை உலக அரங்கில் உமக்கு பரிவட்டம்,கட்டப்போவதோ ஆஸ்கார் கூட்டம்.உலகத்தமிழர்
அனைவரும் நாளை தலை நிமிரப்போவதாக உளவு சொல்லிகொண்டிருக்கிறார்கள் பலர்.
ஆனால் என் வரையில் இசை அரங்கில் இந்தியாவும் குறிப்பாக தமிழனும் என்றும் தலை நிமிர்ந்து தான் இருக்கிறோம்.வெவ்வேறு மொழிகள் கொண்டதை போல வெவ்வேறு இசை வகைகளையும் கொண்டது நம் நாடு.அத்தனை இசையையும் இசைக்கக்கூடிய திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள் நம்மிடம்தான் உள்ளார்கள் குறிப்பாக தமிழகத்தில்.
இசையை பொறுத்த வரை இந்தியா என்றும் முன்னிற்கிறது.
சுருங்க சொல்லப்போனால் ஆஸ்கார் குழுவுக்கும் அது இதுவரை விருது வழங்கிய
இசை அமைப்பாளர்களுக்கும் அவர்களுடைய அதாவது அவர்கள் நாட்டின் இசை மட்டும் தான் தெரியும்
ஆனால் நம் இசை அமைப்பாளர்களுக்கோ அவர்கள் இசையும் தெரியும்.
இங்கு இருப்பவர்களுக்கு இசை உலகமும் தெரியும் உலக இசையையும் தெரியும்.
ஆனால் ஆஸ்கார் இது வரை தலை கவிழ்ந்து அவர்கள்
நாட்டையும் அவர்கள் சகோதர நாடுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.
இன்று முதல் முறையாக ஆஸ்கார் தலை நிமிர்ந்து ஒரு தமிழனை பார்க்கிறது.
ஆகவே தமிழன் இசை உலகில் தலை நிமிர்ந்து தான் நிற்கிறான் இது வரை குனிந்திருந்த உலகம் அதாவது ஆஸ்கார் தமிழனையும் தமிழிசையையும் அண்ணாந்து பார்க்கிறது.
அதனை சாத்தியப்படுத்திய உமது சாதனைக்கு(இசைக்கு) ஒரு தமிழனாகவும்,இசை ரசிகனாகவும் வணங்குகிறேன்.நாளை ஆஸ்கார் உமக்கு கிடைக்காவிட்டால் அதில் உமக்கு அதாவது தமிழனுக்கு இழப்பில்லை அது ஆஸ்காருக்குத்தான்.
AR.ரஹ்மான் ஆஸ்கார்.ரஹ்மானாக வாழ்த்துகள்.
இப்படிக்கு,
இசை
@
இளையராஜாவின்
ரசிகன்,
கோ.திருமலைக் கோனேரி.
இப்படிக்கு,
இசை
@
இளையராஜாவின்
ரசிகன்,
கோ.திருமலைக் கோனேரி.